ஞாயிறு, 2 அக்டோபர், 2022

காதலோடு கதைத்த பொழுதில்...

அவன்:

கார்முகில்
அருளும் முதல் துளியோ?
மழை புணர்ந்ததும்
மண் உமிழும் புது மணமோ?
வைகறை பூப்படைந்த
புதுமலரோ?
கவிதைக்குள் சூழ் கொண்ட
தமிழ் சுவையோ?
அவள் யாரோ? அது நீயோ?

அவள்:

என் துகிலினுள் நுழைந்து
தழுவும் மென்காற்றோ?
என் கனவுகள் களிகொள்ளும்
எண்ண வண்ணங்களோ?
என் கொலுசுக்குள் சிணுங்கும்
வெட்கச் சிம்பொனியொ?

அவன் யாரோ? அது நீயோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தினம் தினம்

 தினம் தினம் உன் நினைவுகள் மலர்ந்திட கணம் தொரும் மணம் முகிழ்ந்திடும் நறு மலரென என் உடல் தனில் நீ கொடியென படர்ந்திட அனுதினம் நின்னணைப்பினில் ...